இக்கணத்தில்
உனை விலகிப்போவதைத் தவிர
வேறு மார்க்கம் ஏதுமில்லை
எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை
உன் வழி அதுதான் எனத்
தேர்ந்தெடுத்து நீ விலகிய பின்
யாரும் பயணித்திராத
துயர்மிகு பாதை இதுவானாலும்
நான் இனிப்
போய்த் தான் ஆகவேண்டும்
கோபம் விளைவித்த துணிச்சல்
என் முன்னே வேகமாக நடக்கிறது
வெகு சீக்கிரத்திலேயே
நான் திரும்பி விடுவேன் என
நீ காத்திருக்கலாம்
ஏளனப் புன்னகை
மெல்ல மெல்ல மறைந்து
உன் முகத்தில் இறுக்கம் வந்தமர்ந்து
விபரீதத்தை உணரும் கணத்தில்.....
நீ வரவே முடியாத வெளியொன்றில்
எனதாத்மா மிதந்து கொண்டிருக்கும்
2010.08.29 இரவு 9 மணி
(நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்-2011)
10 comments:
அன்பின் சகோதரி,
சிறியதொரு தலைப்பில் வழமை போலவே நல்லதொரு கவிதையைத் தந்திருக்கிறீர்கள்.. தொடருங்கள் :-)
கோர்த்த வரிகளும் உள்ளடக்கமும் அருமை
உங்கள் கவிதை படித்து முடித்ததும் "கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் கரைவேனோ" என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது.
வாருங்கள் ரிஷான்,
உங்கள் தொடரான பின்னூட்டங்களுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்.
வாருங்கள் செய்தாலி,
உங்கள் கருத்துக்கு நன்றி.
வாருங்கள் நூருல் அமீன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
ஏளனப் புன்னகை
மெல்ல மெல்ல மறைந்து
உன் முகத்தில் இறுக்கம் வந்தமர்ந்து
விபரீதத்தை உணரும் கணத்தில்.....
நீ வரவே முடியாத வெளியொன்றில்
எனதாத்மா மிதந்து கொண்டிருக்கும்
////
///
//
/ சொல்லில் வடிக்க முடியாத வேதனை மனதில் தோன்றி விட்டது!
வாருங்கள் tamilraja,
உங்கள் வருகை குறித்து மகிழ்வடைகிறேன்.
அன்பின் சகோதரி,
சிறப்பான கவிதையை விட்டு விலகிப் போக மனமில்லை.
வாழ்த்துகள்
//எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை//
அருமை!
Post a Comment