2009.05.04 (16:14)


இன்று கதைத்து நீதானா?

அன்புத் தம்பி

அது நீதானா?



உனது குரல்

எனது நம்பிக்கைகளை உடைத்தது

உனது கோரிக்கை

எனது தைரியத்தைச் சிதைத்தது


எந்தப் பதிலுமளிக்காத

தொலைபேசி இலக்கமொன்றை

எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்

கடல்கள் தாண்டி

மலைகள் தாண்டி

ஏக்கத்துடன் திரும்பின

பல நூறு அழைப்புகள்



எல்லோரிடமும் புன்னகையை

மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்

நீ தான் இன்று

கைவிடப்பட்ட படகொன்றில்

அத்தனை பேரையும்

தவிக்க விட்டுள்ளாய்



தூர நாட்டில்

கிடத்தப் பட்டிருக்கும்

மருத்துவமனைக் கட்டிலொன்று

பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்

என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது

தனது அருளின் அரவணைப்புக்குள்

இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று

உள்ளம் உருகியழுகிறது


டோஹாவின் காற்றே....மண்ணே....

நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..

அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்

மாபெரிய வானகமே...

எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட

இறைவனிடம் முறையிடுங்கள்


ரிஷா.......................ன்

உன் வருத்தங்களை

எங்களுக்குத் தந்து விட்டு

நீ எழுந்து வந்து விடு

எமது ஆரோக்கியங்களை

உன்னுடலில் வாங்கிக் கொண்டு

இன்புற்று வாழ்ந்து விடு

____________________________________-
* இதனைப் படிப்பவர்கள் ஒரு கணம்
விழிமூடி மெளமாக இருங்கள்
சகோதரன் ரிஷான் நலம் பெற வேண்டு மென்று
பிரார்த்தியுங்கள்