தம்பி ரிஷான் நலம் பெற வேண்டும்-2





மனமுருகிக்கேட்ட பிரார்த்தனைகளின் முடிவில்
அடுத்துச் செய்வது
என்னவென்றறியாமல்
வலிமிகுந்த கேள்விகள்
வீடெங்கும் பரவிப் போயிருந்த
இன்றைய
அந்திப் பொழுதின் பளுவை நீக்கி
நீயழைத்தாய்


எஞ்சியிருக்கும் வலுவெலாம் திரட்டி
இரகசியக் குரலில் கதைத்தாய்
உயிர் பிழிபடும் வேதனையை
உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும்
வழியவிட்டாய்

உன் சிரித்த முகம்
உன்து புன்னகைக் குரல்
எல்லாவற்றையும்
இந்தப் பயங்கர நாட்களிடம்
பசியாறக் கொடுத்துவிட்டாய்

உனது தோள் மீது வந்தமரும்
பட்சிகளெதுவும் பறந்து வராத
அடிவான மலைத் தொடர்களை... ...
உன் குருதியில் கலந்திருக்கும் நஞ்சை
வாங்கிக் கொள்ளத் தெரியாமல் பார்த்திருந்த
விசாலமிகு வான வெளியை ........
வேதனை நிரம்பியிருக்கும்
மிகப் பெரிய கடலொன்றை.....
எண்ணித் தவிக்கிறாய் .
இன்னும் நீ
நோவுகளில் இருந்து மீளவில்லை
இது வரையும் நீ
துயரத்தின் எல்லையைத் தாண்டவும் இல்லை

உனை ஆபத்தில் கிடத்திக் கொண்டு
அடுத்தவரின் நிம்மதிக்காக
அனைத்தையும் மறைத்தாய்
உன் உடலில் புகுந்த நஞ்சை
நாங்கள் பருகியிருக்கக் கூடாதா?
உனை வதைக்கும் வலிகளை
நாங்கள் ஏற்றிருக்கக் கூடாதா?

அதிகாலையின் மீதும் பத்து இரவுகள் மீதும்
வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும்
அந்த மாபெரும் நகர்மீதும் மலை மீதும்
சத்தியம் செய்பவனே....
எங்கும் நிறைந்த இறைவனே
எல்லாம் வல்ல ஒருவனே

எங்கள் தம்பியை
சுகப்படுத்தித் தந்துவிடு
நகரமுடியாத வேதனையின் சுமையுடன்
கால்களைச் சுற்றியிருக்கும்
இந்தக் காலத்தைப் போக்கிவிடு





16 comments:

தமிழ்நெஞ்சம் said...

நண்பர் ரிஷான் நலம் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

food poison சம்பந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் - என எனக்கு மெயில் வந்தது. மிகுந்த வருத்தமுடன் இருக்கிறேன்.

தமிழ்நெஞ்சம் said...

இப்போது எப்படி உள்ளார்?

தனி மடலில் தொடர்புகொள்ளவும் : tamilnenjam@gmail.com

ஆயில்யன் said...

:((

அவர் காண்டக்ட் பண்றதுக்கு எதாச்சும் தகவல் இருந்தா கொடுங்கன்னு ஏற்கனவே போன போஸ்ட்ல கேட்டிருந்தேன் ஒண்ணும் தகவல் இல்ல கிட்டதட்ட பத்து நாளா நாம சோகத்தை பகிர்ந்துக்கிட்டும் கவிதை வாசிச்சுகிட்டும் இருந்தா சரிதானா...?

எத்தனையோ நல் உள்ளங்கள் ரிஷானை பற்றி நலம் விசாரிக்கும் கேள்விகளில் நானும் பதில் அளிக்க இய்லாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்! வரும் செய்திகள் ஒவ்வொன்றும் விதவிதமாய் வருகின்றன இங்கு !

உணர்ந்து என்ன நிலைமை என்பதை உடன் சொல்லுங்கள்!

தமிழ்நதி said...

எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பேசும் தன்மையுடையவர் ரிஷான். அவர் நலம் பெற்று வந்து எங்களோடு பேசும் நாளுக்காகக் காத்திருக்கிறோம். 'சகோதரி'என்ற விளிப்பை மீண்டும் நாங்கள் கேட்போம். நம்பிக்கையோடிருங்கள் பஹீமா.

பஹீமாஜஹான் said...

"நண்பர் ரிஷான் நலம் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்"

நன்றி தமிழ்நெஞ்சம்.

பஹீமாஜஹான் said...

"கிட்டதட்ட பத்து நாளா நாம சோகத்தை பகிர்ந்துக்கிட்டும் கவிதை வாசிச்சுகிட்டும் இருந்தா சரிதானா...? "

சரியில்லைத் தான்.

ரிஷான் குணமாகி வரும் வரைக்கும் ஆளாக்கு விடைதெரியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

:(

பஹீமாஜஹான் said...

"நம்பிக்கையோடிருங்கள்"
வாழ்வில் இது வரை எதிர் நோக்கியிருக்காத பயங்கர நிலைமையொன்றில் சிக்கி மீண்டுள்ளார்.

பாதிப்படைந்திருக்கும் அவரது உடல் நிலையும் குரலும் மிகுந்த துயரத்தைத் தந்து கொண்டிருக்கிறது.

த.ஜீவராஜ் said...

நண்பர் ரிஷான் நலம் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

மீளவும் வந்துவிட்டேன் சகோதரி ஃபஹீமா ஜஹான் !

அன்பான உங்கள் பிரார்த்தனைகளுக்கும், பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைத்ததற்கும், இன்னும் எனக்காகப் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்காகவும் எனது நன்றிப் பதிவு இங்கே
http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

நண்பர்கள் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க விகடனில் தொடராக வெளிவரும் எனது மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் நண்பர்களே.

இளைய அப்துல்லாஹ் said...

பஹீமா உனது மன உணர்வுகளை கண்ணீரொடு சொல்லியிருக்கிறாய். அவர் என்ன அவஸ்தைப்பட்டார். என்று மனதை பெரும் அந்தரிக்க வைத்து விட்டாய் எல்லோரக்குமான மன நிம்மதியை தேடும் நீ மிகவும் மன நிம்மதியோடு இருக்க ஏகன் உனக்கு துணை நிற்கட்டும்.

இளைய அப்துல்லாஹ்

பஹீமாஜஹான் said...

"நண்பர் ரிஷான் நலம் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்."

மிக்க நன்றி த.ஜீவராஜ்

பஹீமாஜஹான் said...

அன்புள்ள ரிஷான்

"மீளவும் வந்துவிட்டேன் சகோதரி ஃபஹீமா ஜஹான் !"

இதற்காகவே பிரார்த்தனையுடன் காத்திருந்தோம்.

"மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் நண்பர்களே."

அதையறியத் தான் எல்லோரும் ஆவலோடு இருந்தோம்.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் இளைய அப்துல்லாஹ்

அடடா
வராதவங்களெல்லாம் இந்தப் பக்கம் வந்திருக்கிறாங்க...
யார் வழி காட்டியது?

பரவாயில்லை துயரத்தின் போதாவது விசாரிக்க வந்தீர்களே..
அதையிட்டு மகிழ்வடைகிறேன்.

"எல்லோருக்குமான மன நிம்மதியை தேடும் நீ மிகவும் மன நிம்மதியோடு இருக்க ஏகன் உனக்கு துணை நிற்கட்டும்"

அண்ணன் உங்கள் பிரார்த்தனை நிறைவேறட்டும்.

இது என் சங்கப்பலகை said...

பாசப் புயல்களே..உங்களோடு நானும் பிறக்கவில்லையே என ஏங்குகிறேன்.
பஹீமா..

பஹீமாஜஹான் said...

"இது என் சங்கப்பலகை"
வாருங்கள்.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது