அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையம்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

வழமை போலவே அம்மாவின் அருட்கரங்களில்
ஒளி காழும் உத்தியாக மின் சூள் அகப்பட்டிருந்தது!

இரவுச் சாப்பாட்டின் ஒரு கவளம்
மீதியாயிருந்ததென் பீங்கானில்:
கையில் தேடியெடுத்திருந்த மெழுகுவர்த்திக்குத்
தீச்சுடரொன்று தேவைப் பட்டிருந்தது இளையவளக்கு:
எழுதிக் கொண்டிருந்த மூத்தவளுக்கோ
இறுதிச் சொல்லில் ஓரெழுத்து எஞ்சியிருந்ததப்போது:
அவரவர் தேவை கூறி அம்மாவைக்
கூப்பிட்ட கூச்சலில்
இருண்ட இல்லம் ஒலியலைகளால் நிரம்பிற்று!

முதலில் எனது பீங்கானில் விழுந்து தெறித்த
ஓளிக்கற்றைகளின் துணையுடன்
இளையவளின் மெழுகுதிரி சுடர்விடடெரிந்தது:
மூத்தவளின் கடைசி எழுத்துக்கும் அம்மா
ஒளி காவி நடந்த பின்னர்
சட்டென நுழைந்தது வீட்டினுள் மின்சாரம்!

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனத