உனது சொர்க்கமென அமைந்த வீட்டில்
அவள் நோய் வாய்ப்பட்டிருக்கிறாள்
நீ வளர்த்த எல்லாச் செடிகளும்
அவளுடன் வாடிக் கிடக்கின்றன
ஆனந்தமும் அன்பின் பரிமாற்றங்களும்
துள்ளிக் குதிக்கும் அறையெங்கும்
படிந்து போயுள்ளன
அவளது வருத்தங்கள்
கவிழ்ந்து தூங்குகிறது படுக்கைதனில்
கசப்பானதொரு வேதனை
உனை நகரவிடாது
அருகே அமர்த்தியுள்ளன
அவளது எளிய தேவைகள்
எந்தக் குறுக்கிடல்களும்
அமைதியைக் குலைத்துவிடக் கூடாதெனத்
தொலைபேசிகளைத்
துண்டித்து வைத்துவிட்டுத்
தூக்கம் விழித்திருக்கிறாய்
அபூர்வமாக
இன்றைய அதிகாலைப் பொழுதில்
அலாரத்துக்கு முன்பாக விழித்து
அமைதியாகக் காத்திருக்கிறாள்
உடலைவிட்டு விலகிப்போன
வலிகளை நினைத்துப் பார்க்கிறாள்
ஒரு கொடிபோல
ஆதாரத்தைத் தேடும் தூண்டலுடன்
உனைச் சுற்றியுள்ளது ஒரு கரம்
மென் நீல ஒளி சிந்தும்
இரவு விளக்கின் கீழே
மின்விசிறிக் காற்றிலசையும்
தலைமுடியைக் கோதிவிடுகிறாய்
உன் விரல்களிடையே தோய்கிறது
கருணையின் பரிதவிப்பு
தேவதையைப் போல
அசைகின்றன திரைச் சீலைகள்
இனி
அவளது நடமாட்டம்
இறுகிப் போயுள்ள வீட்டை
மீண்டும் தளர்த்தி வைக்கும்
24 comments:
உங்கள் கவிதைகள் அருமை நன்றாக இருக்கின்றன மிக்க. நன்றி. மார்க்கமும் கலந்து இறைவனைப் பற்றி எழுதினால் நல்லது.. அல்லது .அதற்காகவும் சிறிது எழுதலாம்
//மென் நீல ஒளி சிந்தும்
இரவு விளக்கின் கீழே
மின்விசிறிக் காற்றிலசையும்
தலைமுடியைக் கோதிவிடுகிறாய்
உன் விரல்களிடையே தோய்கிறது
கருணையின் பரிதவிப்பு
தேவதையைப் போல
அசைகின்றன திரைச் சீலைகள்
இனி
அவளது நடமாட்டம்
இறுகிப் போயுள்ள வீட்டை
மீண்டும் தளர்த்தி வைக்கும்//
நம்பிக்கையின் வரிகள்....வாழ்த்துக்கள் ஃபஹிமா மீண்டும் கலக்கியுள்ளீர்கள்.
முகவைத்தமிழன்
9047507665
அலாதியான அன்பை அழகாய் பேசும் கவிதை.
அன்பின் ஃபஹீமாஜஹான்,
//தேவதையைப் போல
அசைகின்றன திரைச் சீலைகள்
இனி
அவளது நடமாட்டம்
இறுகிப் போயுள்ள வீட்டை
மீண்டும் தளர்த்தி வைக்கும்//
பெண் நோயுற்றிருக்கும் வீடுகளில் எல்லாம் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் நிகழ்ந்துவிடுகின்றன என சொல்வதற்கில்லை சகோதரி.
ஆனால் ஒரு அன்பான துணை வாய்த்த பெண்ணுக்கு இவை நிகழக் கூடும். :)
வழக்கம்போலேவே....... இதுவும் ஒரு நல்ல கவிதை
வாருங்கள் nidurali அவர்களே,
"மார்க்கமும் கலந்து இறைவனைப் பற்றி எழுதினால் நல்லது.. அல்லது .அதற்காகவும் சிறிது எழுதலாம்"
முயற்சி செய்கிறேன்.
தங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
வாருங்கள் முகவைத் தமிழன்,
நம்பிக்கையின் வரிகள்....
தங்கள் விருப்பம் நிறைவேறி இருக்கிறது என நினைக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாருங்கள் ராஜா சந்திரசேகர் அவர்களே,
"அலாதியான அன்பை அழகாய் பேசும் கவிதை"
ஆனால் இந்த அன்பு வாழ்வு நீளக் கிடைத்தால் வாழ்க்கை எவ்வளவு அற்புதமாயிருக்கும்?
தங்களது வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
வாருங்கள் ரிஷான்,
"பெண் நோயுற்றிருக்கும் வீடுகளில் எல்லாம் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் நிகழ்ந்துவிடுகின்றன என சொல்வதற்கில்லை சகோதரி"
உண்மை உண்மை.உண்மையான காதலன் காதலிக்கிடையே அல்லது நீங்கள் சொல்வதைப் போல "ஒரு அன்பான துணை வாய்த்த பெண்ணுக்கு"
மாத்திரமே இந்த வாழ்க்கை சாத்தியம்.
வருகைக்கு நன்றி தம்பி.
வாருங்கள் தம்பி அகிலன்,
நீண்ட காலத்துக்குப் பின்னர் வந்திருக்கிறீங்க.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
கவிதைவரிகள் மிக அழகு உணர்ந்து வாசித்த உணர்வு கிடைத்தது.
நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பாருங்கள்.
http://niroodai.blogspot.com/
http://fmalikka.blogspot.com/
அன்புடன்
நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் தளத்திற்கு வரக்கிடைத்தது
எப்போதும் போலவே உங்கள் கவிதை நன்றா இருக்கின்றது.
வாய்க்கட்டும்.
கவிதை - அழகியல்.
வாருங்கள் மலிக்கா,
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
"நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பாருங்கள்"
நிச்சயமாகப் பார்க்கிறேன்.
வாருங்கள் ஃபாசிரா மைந்தன்,
உஙகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாருங்கள் தமிழன்- கறுப்பி,
"வாய்க்கட்டும்."
:-)
நன்றி.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
காட்சி கெடு த்திடலாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
பேதமை அற்றிடும் காணீர்.
------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
தொழுது வர துவா செய்கின்றேன்.
-அன்புடன் -
அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,
தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,
இஸ்லாமிய ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
nidurali@gmail.com
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
காட்சி கெடு த்திடலாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
பேதமை அற்றிடும் காணீர்.
------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
தொழுது வர துவா செய்கின்றேன்.
-அன்புடன் -
அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,
தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
காட்சி கெடு த்திடலாமோ ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
பேதமை அற்றிடும் காணீர்.
------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
தொழுது வர துவா செய்கின்றேன்.
-அன்புடன் -
அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,
கவிழ்ந்து தூங்குகிறது படுக்கைதனில்
கசப்பானதொரு வேதனை
உனை நகரவிடாது
அருகே அமர்த்தியுள்ளன
அவளது எளிய தேவைகள்
எந்தக் குறுக்கிடல்களும்
அமைதியைக் குலைத்துவிடக் கூடாதெனத்
தொலைபேசிகளைத்
துண்டித்து வைத்துவிட்டுத்
தூக்கம் விழித்திருக்கிறாய்
மிகவும் மென்மையாக வலியை உணர்த்தும் வரிகள்
நல்ல கவிதை
Your poems well. try to write local magazine
www.padikal.blogspot.com
Waseem Akram
வாருங்கள் சகோதரர் முகம்மது அலி ஜின்னா அவர்களே,
உங்கள் பிரார்த்தனைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.
வாருங்கள் சித்தாந்தன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாருங்கள் AKRAM NAJIMUDEEN,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment